வழிதவறிய மீனவர்களைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்

கடலில் வழி தவறுகின்ற மீனவர்கள் உள்பட படகுகள், கப்பல்கள் உள்ளிட்ட 64 வகையான பொருட்களை கண்டுபிடிக்க SARAT என்ற பெயரில் மொபைல் ஆப்பை கடல் தகவல் சேவைகளின் இந்திய தேசிய மையம் உருவாக்கியுள்ளது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த SARAT மொபைல் ஆப் மூலமாக கடலில் தத்தளிப்பவர்கள், காணாமல் போனவர்கள் ஆகியோர் உள்பட பல்வேறு வகையான 64 பொருட்களை மிகவும் எளிதாக கண்டுபிடிக்க முடியும் வகையில் சூப்பர் கணினிகளின் உதவியை கொண்டு ஹைதராபாத் கடல் சேவை மையத்துக்கான இந்திய தேசிய மையம் உருவாக்கியுள்ளது.

கடலில் இருந்து 10 கி.மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் மீனவர்கள், செல்போனில் நெட்வொர்க் கிடைத்தால், SARAT-ஐப் பயன்படுத்த முடியும். இது குறிப்பாக மீனவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தேடுதல் பணியில் ஈடுபடும்போது, காணாமல் போன பொருள், மனிதர்கள் கடைசியாக எங்கு இருந்தார்கள் என்ற விவரத்தை ஜிபிஎஸ் உதவியுடன் குறிப்பிடவேண்டும் என்றும், அப்படி குறிப்பிட்டால் சூப்பர் கணினிகள் செயற்கைக்கோள் துணையுடன் விரைவில் கண்டுபிடிக்கமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார். SARAT ஆப்பைப் பயன்படுத்துவது குறித்து விரைவில் கடற்படை பாதுபாப்பு படையினர் மீனவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...