பட்டாசு கடைக்கான உரிமம் பெற கால அவகாசம் நீட்டிப்பு


தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 18-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 

பட்டாசுக்கடைக்கான உரிமம் பெற கடந்த ஜீலை மாதம் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். 

இந்த நிலையில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பட்டாசுக்கடை அமைப்பதற்கான உரிமம் பெற விருப்பமுடையவர்கள் மாநகராட்சியிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். ஆனால், மாநகராட்சியிடம் இருந்து அனுமதி பெற காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது.

இதனால், பட்டாசுக்கடை அமைப்பதர்கான உரிமம் பெற வரும் 11-ம் தேதி வரையில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக  போலீசார் அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது :- 

வரும் 11-ம் தேதி மதியம் 2 மணி வரை பட்டாசுக்கடை அமைப்பதற்கான உரிமம் பெற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலக்கப்பட்டு, காவல்துறையின் ஆய்வுக்கு பிறகே உரிமம் வழங்கப்படும். 

வெடிபொருட்கள் கட்டுப்பாட்டுத்துறை அறிவுரைப்படி, சாலையோரங்களில் பட்டாசுக்கடைகள் அமைக்க உரிமம் வழங்கப்பட மாட்டாது. குறித்த காலக்கெடுவுக்குள் முழுமையாக பெறப்படாத விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...