பட்டாசு கடைக்கான உரிமம் பெற கால அவகாசம் நீட்டிப்பு


தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 18-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 

பட்டாசுக்கடைக்கான உரிமம் பெற கடந்த ஜீலை மாதம் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். 

இந்த நிலையில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பட்டாசுக்கடை அமைப்பதற்கான உரிமம் பெற விருப்பமுடையவர்கள் மாநகராட்சியிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். ஆனால், மாநகராட்சியிடம் இருந்து அனுமதி பெற காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது.

இதனால், பட்டாசுக்கடை அமைப்பதர்கான உரிமம் பெற வரும் 11-ம் தேதி வரையில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக  போலீசார் அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது :- 

வரும் 11-ம் தேதி மதியம் 2 மணி வரை பட்டாசுக்கடை அமைப்பதற்கான உரிமம் பெற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலக்கப்பட்டு, காவல்துறையின் ஆய்வுக்கு பிறகே உரிமம் வழங்கப்படும். 

வெடிபொருட்கள் கட்டுப்பாட்டுத்துறை அறிவுரைப்படி, சாலையோரங்களில் பட்டாசுக்கடைகள் அமைக்க உரிமம் வழங்கப்பட மாட்டாது. குறித்த காலக்கெடுவுக்குள் முழுமையாக பெறப்படாத விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...