நீலகிரியில் உள்ள நீர்மின் நிலையங்களை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ஆய்வு

நீலகிரி மாவட்டம், பைக்காரா மற்றும் சிங்காரா நீர்மின் நிலையங்களை இன்று (ஜூலை 3) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு (2016-2018) தலைவர் எஸ்.முத்தையா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நீலகிரி பைக்காரா மற்றும் சிங்காரா நீர் மின் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழத் தலைவர் எஸ்.முத்தையா, அதன் செயல்முறைகளை கேட்டறிந்தார்.



பைக்காரா இறுதி நீர்மின் நிலையம் 150 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்டது. இதற்கு நீராதாரம் கிளன்மார்கன் அணையிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. இதன் நீர்பிடிப்பு பரப்பானது 154.23 சதுர கிலோமீட்டர் ஆகும். இதன் இயக்க உரம் 1039 மீ. இந்நீர்மின் நிலையம் துவக்கப்பட்டு ஆண்டு 2005. ஒரு வருடத்திற்கு சராசரியாக 265.94 மில்லியன் யூனிட் கிடைக்கப்பெறுகிறது. அதிகபட்சமாக வினாடிக்கு 584 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து சிங்காரா நீர்மின் நிலையத்தை ஆய்வு செய்து பார்வையிட்ட எஸ்.முத்தையா அதன் செயல்முறைகளையும் கேட்டறிந்தார். 

இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கர பாண்டியன், உதகை கோட்டாட்சியர் கே.கார்த்திகேயன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...