விரைவில் புதிய விஸ்வரூபம் எடுக்கும் கோவை ரயில் நிலையம்

தென்னக ரயில்வே சேலம் கோட்ட மண்டல மேலாளர் ஹரிஷங்கர் வர்மா நேற்று முன்தினம் கோவை ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். மேலும், கோவை ரயில் நிலையத்தின் முன்புறத்தில் போதிய இடவசதி இல்லாததால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் கோவை ரயில் நிலையத்தின் முன்புறத்தில் நடைபெறும் வேலைக்கான புதிய முகப்பின் தோற்றத்தின் மாதிரி படத்தை வெளியிட்டார்.



பின்னர், ஆய்வு குறித்து செய்தியாளர்களிடம் சேலம் கோட்ட மண்டல மேலாளர் ஹரிஷங்கர் வர்மா கூறுகையில்; கோவை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து தவறான புரிதல் உள்ளது. முறையான திட்டமிடல் அடிப்படையிலேயே பணிகள் நடைபெறுகிறது. ரயில் நிலையம் முன்பு பழைய எஞ்சின் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் இரு புறமும் 5 மீட்டர் அளவிற்கு பொதுமக்கள் செல்வதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில் நிலையம் வாயில் வரை கூரை அமைக்கப்படவுள்ளது. இதனால் பொதுமக்கள் மழை, வெயிலுக்கு ஒதுங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையம் நுழைவுவாயில் அனைத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது. அரசு- தனியார் முயற்சியில் கார் பார்க்கிங் நிர்வகிக்க 2 முறை ஏலம் விடப்பட்டும் யாரும் முன்வராததால் இரு சக்கர பார்க்கிங்கை அரசே நடத்தப்படவுள்ளது. அடுத்தாண்டு ஜூலைக்குள் 600 கார் நிறுத்தும் அளவிற்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி அமைக்கப்படும். இந்த பார்க்கிங் வசதி இரயில் நிலையத்தின் பின்புற நுழைவு வாயிலில் அமைக்கவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2 முதல் 3 மாதங்களில் பணிகள் துவங்கப்பட்டு 7 முதல் 8 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும். 32 சிசிடிவி கேமராக்கள் உள்ள நிலையில், 8 சிசிடிவி கேமராக்கள் ரயில் நிலையம் வருகை, வெளியே செல்வதை கவனிக்க அமைக்கப்படும். அக்டோபரில் பணிகள் முடிக்கப்படும்" என்றார். 



மேலும், கோவை பொதுமக்களில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த பெங்களூர்- கோவை இடையிலான இரவு நேர ரயிலுக்கு குறைவாகவே பொதுமக்களிடம் வரவேற்பு உள்ளதால் 10 முதல் 15 நாட்களில் புதிய இஞ்சின்கள் பொருத்தப்பட்டு 2 முதல் 3 மாதங்களில் புதிய உதய் ரயில் முழுவீச்சில் இயக்கப்பட உள்ளது என சேலம் கோட்ட மண்டல மேலாளர் ஹரிஷங்கர் வர்மா கூறினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...