இயற்கை அணைத்து வரவேற்கும் நீலகிரி பையோஸ்பியர் இயற்கை பூங்கா !

நீலகிரி பையோஸ்பியர் இயற்கை பூங்கா 1986 ஆம் ஆண்டு கோவையில் உள்ள தாவரங்கள் மற்றும் மரங்களை பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட விலங்கியல் பூங்காவாகும். இந்த இயற்கை பூங்கா தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் 1975 கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வமைப்பின் முக்கிய நோக்கம் நீலகிரி மலைத் தொடரில் உள்ள உயிரினத்தின் இயல்பான மரபு பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இந்த பூங்கா மக்களை, குறிப்பாக பள்ளி மாணவர்களை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

இப்பகுதியைச் சுற்றிலும், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 480 இன தாவரங்கள் உள்ளன. இதில் 85 இனங்கள் நீலகிரி பையோஸ்பியர் பூங்காவில் மட்டுமே காணப்படுகின்றன. இந்த 85 இன தாவரங்களில் சுமார் 30 சதவிகிதம் காடுகளில் ஆபத்துகள் நிறைந்த வியக்கத்தக்க பகுதியில் உள்ளன என்று கூறப்படுகிறது. தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் லக்னோ, இந்தியா மற்றும் பொட்டானிக்கல் கார்டன் கன்சர்வேஷன் இன்டர்நேஷனல் (பி.ஜி.சி.ஐ) இங்கிலாந்து ஆகியவற்றால் அச்சுறுத்தப்பட்ட தாவர வகைகளை நீலகிரி பையோஸ்பியர் பூங்கா கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



கோவையிலிருந்து 35 கி மீ தூரத்தில் ஆனைகட்டி என்ற ஊருக்குப் பக்கத்தில் இந்த நீலகிரி பயோஸ்பியர் இயற்கை பூங்கா அமைந்துள்ளது. சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மலை பூங்காவில் கிட்டத்தட்ட 240 நாட்டுமரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மிகவேகமாக அழிந்துகொண்டு வரும் சாம்பிராணி மரம், திருவோடுமரம் போன்ற அரிய மரங்களும் இங்கு காப்பாற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இம்மையமானது பலவகைகளில் தென்னிந்தியாவின் சுற்றுச் சூழலையும் புவிச்சூழலையும் சமன் செய்து வெப்பத்தின் தாக்கத்தை குறைத்து மழை பொழிவை அதிகரிக்க செய்கிறது.



நீலகிரி பையோஸ்பியர் இயற்கை பூங்காவை குடும்பத்தோடு கண்டுகளிக்க வரும் இயற்கை ஆர்வலர்களுக்கு கூடுதலான ஒரு தகவல் தயானந்த சரஸ்வதி அவர்களின் ஆசிரமமும் சலீம் அலியின் பறவை சரணாலயமும் அருகாமையிலேயே உள்ளன.

விடுமுறை நாட்களை பயனுள்ளதாக கழிக்க விரும்பும் மாணவர்கள், மற்றும் பொதுமக்களுக்கு கோவை நீலகிரி பையோஸ்பியர் இயற்கை பூங்கா ஒரு சிறந்த சுற்றுலாத் தளமாக அமையும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.



Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...