மனுநீதிநாள் மக்கள் தொடர்பு முகாமில் ரூ.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நீலகிரி ஆட்சியர் வழங்கினார்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம், பாரிஸ் ஹாலில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற மனுநீதிநாள் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இம்மனுநீதி நாள் கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 25 நபர்களுக்கு ரூ.2,67,000 மதிப்பில் முதியோர் ஓய்வூதிய தொகையும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் 48 குடும்ப அட்டைகளும், மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 14 பயனாளிகளுக்கு 14,05,000  வேளாண் விவசாய கடனுதவியும், சேரம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கம் மூலம் 24 பயனாளிகளுக்கு ரூ.18,96,000 விவசாய கடனுதவியும், 3 நபர்களுக்கு விதவை சான்றிதழ்களும் ஆக மொத்தம் 114 பயனாளிகளுக்கு ரூ.35,68,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



அதனை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து 535 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், ஒவ்வொரு அரசு துறைகளும் பொதுமக்களிடமிருந்து பெறும் மனுக்களை முக்கியத்துவம் கொடுத்து நிறை, குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு அறிவுறுத்தினார்.

இம்முகாமில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜென்மம் (நிலம்) பாண்டியன், உதவி ஆணையர் (கலால்) மற்றும் கூடலூர் கோட்டாட்சியர் (பொ) முருகன் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...