மனுநீதிநாள் மக்கள் தொடர்பு முகாமில் ரூ.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நீலகிரி ஆட்சியர் வழங்கினார்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம், பாரிஸ் ஹாலில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற மனுநீதிநாள் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இம்மனுநீதி நாள் கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 25 நபர்களுக்கு ரூ.2,67,000 மதிப்பில் முதியோர் ஓய்வூதிய தொகையும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் 48 குடும்ப அட்டைகளும், மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 14 பயனாளிகளுக்கு 14,05,000  வேளாண் விவசாய கடனுதவியும், சேரம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கம் மூலம் 24 பயனாளிகளுக்கு ரூ.18,96,000 விவசாய கடனுதவியும், 3 நபர்களுக்கு விதவை சான்றிதழ்களும் ஆக மொத்தம் 114 பயனாளிகளுக்கு ரூ.35,68,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



அதனை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து 535 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், ஒவ்வொரு அரசு துறைகளும் பொதுமக்களிடமிருந்து பெறும் மனுக்களை முக்கியத்துவம் கொடுத்து நிறை, குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு அறிவுறுத்தினார்.

இம்முகாமில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜென்மம் (நிலம்) பாண்டியன், உதவி ஆணையர் (கலால்) மற்றும் கூடலூர் கோட்டாட்சியர் (பொ) முருகன் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...