உதகை சிஎஸ்ஐ சிஎம்எம் பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரைகளை ஆட்சியர் வழங்கினார்

நீலகிரி மாவட்டம், உதகை, சி.எஸ்.ஐ சி.எம்.எம் மேல்நிலைப்பள்ளியில் இன்று சுகாதாரத்துறையின் சார்பில், பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரைகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.



இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, “நமது மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கம் தினம் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் அங்கன்வாடி மையங்களிலும் இம்மாதம் 10 மற்றும் 17ம் தேதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் 543 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 167 தனியார் பள்ளிகள் மற்றும் 486 அங்கன்வாடி மையங்களிலும் பயிலும் 1 வயது முதல் 19 வயது வரையுள்ள மாணவ, மாணவியருக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை மதிய உணவிற்குப் பிறகு ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

பள்ளி செல்லாத குழந்தைகளுக்கும் அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்படவுள்ளது. 1 முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரை அல்லது 5 மி சிரப் மற்றும் 2 வயது முதல் 19 வயது வரையுள்ள மாணவ, மாணவியருக்கு ஒரு முழு மாத்திரையும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இம்மாதம் 10-ம்தேதி பள்ளிக்கு வராத விடுபட்ட மாணவ, மாணவியருக்கு இம்மாதம் 17ம் தேதி குடற்புழுநீக்கும் மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரத்த சோகையை தடுக்கும் இந்த தேசிய குடற்புழு நீக்கும் திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் மொத்தம் 1,42,225 மாணவ, மாணவியர்கள் பயன் பெறுவர்.” என்றார். 

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற முதிமொழிக்கேற்ப மாணவ, மாணவியர்கள் இதுபோன்ற மருத்துவ முகாம்களை பயன்படுத்தி தங்கள் உடல் நலத்தினை நோய்வாய்படாமல் காத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி திறந்தவெளியில் மலம் கழித்தல் தீமையினை தங்கள் பெற்றோருக்கும், உறவினருக்கும், தங்கள் சுற்றுத்தாருக்கும் தெரியப்படுத்த வேண்டும். ஏனெனில் மாணவ, மாணவியர்களிடமிருந்து வெளிப்படும் ஒரு கருத்து பொது கருத்தாக எதிரொலிக்கும்.

அதேபோல உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று நோயினை நிவர்த்தி செய்து கொள்ளலாம். பணக்கஷ்டம் ஏற்பட்டால்கூட பூர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால் நம்மில் ஒழுக்கம் கெட்டுப்போனால் வாழ்க்கையே கெட்டுபோய்விடும். எனவே இன்றைய மாணவ, மாணவியர்கள் இச்சமுதாயத்தின் எதிர்கால தூண்கள் என்பதை நினைவிற்கொண்டு ஒழுக்கமான வாழ்க்கை வாழ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.” எனப் பேசினார். 

இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...