நீலகிரியில் காவல்துறையினர் தகாத வார்த்தைகளால் பேசுவதாக மினி லாரி ஓட்டுநர்கள் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மினி லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பில் காவல் துறையினரைக் கண்டித்து கோத்தகிரியில் இருந்து குன்னூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வரை வாகன பேரணியாக வந்து கோரிக்கை மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினர் மினி லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வருவதாகக் கூறி 1000 முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கின்றனர். மேலும் வாகன ஓட்டுநர் உரிமத்தை பறித்துக்கொண்டு எவ்வித விளக்கமும் சொல்லாமல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள் என அழைக்கழிக்கின்றனர். மேலும், தகாத வார்த்தைகளால் பேசி மன உளைச்சல் ஏற்படுத்துகின்றனர் என தெரிவித்தனர்.

முன்னதாக, இந்த வாகன பேரணியால் குன்னூரில் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து குன்னூர் காவல்துறை துணை கண்கணிப்பாளர் முத்தமிழ்.அ. தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து காவல்துறை துணை கண்கணிப்பாளர் கூறுகையில், இந்த விதிமுறைகள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தின் ஆணைப்படி செயல்படுத்தி வருகிறோம். இவர்களின் கோரிக்கையை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளிரம்பாவிற்கு பரிந்துரை செய்கிறோம் என தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...