கோவையில் தூய்மை பாரத இயக்கம் குறித்த சுகாதார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கிவைத்தார்

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் தேவராயபுரம் ஊராட்சி ஒன்றியப்பள்ளியில் இன்று தூய்மை பாரத இயக்கம் குறித்த சுகாதார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.



பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டம் முழுவதும் தூய்மை பாரத இயக்கம் குறித்த சுகாதார பேரணிகள் நடத்தப்பட்டுவருகிறது. ஒவ்வொரு கிராமத்தையும் தூய்மை கிராமமாக மாற்ற ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதால்  ஏற்படும் நோய்கள், வருமான இழப்பு, மருத்துவ செலவு, குழந்தைகளின் வளர்ச்சி பாதிப்பு, ஆகியவற்றை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

மேலும் வீட்டுக்கு வீடு கழிப்பறை கட்டுதல் மற்றும் கழிப்பறை பயன்பாட்டினை பொதுமக்களிடத்தில் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. பெண்களின் கௌவுரவத்தை காப்பதற்கும், மாற்று திறனாளிகள் மற்றும் முதியவர்களின் நலன் காத்திடவும் கழிப்பறை அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும். நம் கிராமத்தை திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற மாற்றுதல் நம் ஒவ்வொருவரின் முயற்சியில் உள்ளது என தெரிவித்தார்.



முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகள் முழு சுகாதார தமிழகம்!!! - முன்னோடி தமிழகம்!!! என்ற உறுதிமொழியை சுகாதாரத்தை பேணி காத்திடும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நிலவேம்பு கசாயத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



இந்த விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (திட்ட இயக்குநர்) ரூபன்சங்கர்ராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சி) பத்மாவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்திபன், சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...