சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி

வ.உ.சி சேவா அறக்கட்டளை சார்பில் இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக போராடி தன் உயிரை நீத்த கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் 271 தியாகிகளின் புகைப்படங்கள் உள்ளடக்கிய புகைப்படக் கண்காட்சிகள் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. கண்காட்சியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவங்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சிக்கு திருக்குறள் மாமன்றம் மற்றும் மூத்த தொழிநுட்ப அலுவலர் தமிழ்வாணன் முன்னிலை வகித்தார்.



இது குறித்து வ.உ.சி சேவா அறக்கட்டளை தலைவர் மாரிமுத்து கூறுகையில், மூன்றுநாள் நடைபெறும் இந்த புகைப்படக் கண்காட்சியில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக போராடி தன் உயிரை நீத்த சுதந்திர போராட்ட தியாகிகளின் அரியவகை புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வகை புகைப்படங்கள் இணையதளங்களில் எளிதில் கிடைப்பதில்லை. திருப்பூர் மற்றும் கோயமுத்தூரில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளை தேடி இவ்வகை புகைப்படங்களை சேகரித்து வைத்துள்ளோம். மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியினை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பார்வையிடுங்கள் என கேட்டுக்கொண்டார்.



இதில் வ.உ.சி சேவா அறக்கட்டளை துணைத் தலைவர் ஆனந்த், செயலாளர் கண்ணன், பொருளாளர் செல்வராஜ் மற்றும் வ.உ.சி சேவா அறக்கட்டளை முக்கிய செயற்குழு உருப்பினர்கள் மற்றும் கிராமிய கலைகள் ஒருங்கிணைப்பாளர் மோகன்தாஸ், ஈர நெஞ்சம் அறக்கட்டளை மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...