உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்த குழந்தைகளுக்கு, கோவையில் அஞ்சலி


உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்த குழந்தைகளுக்கு, கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்திற்கு நிலுவை தொகை வழங்கததால், அந்நிறுவனம் மருத்துவமனைக்கு வழங்கி வந்த ஆக்சிஜனை நிறுத்தியது. இதனால் 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. இந்நிலைaயில் உயிரிழந்த குழந்தைகளுக்கு, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அஞ்சலி  செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான சிறுவர்கள் உயிரிழந்த குழந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.அஞ்சலி நிகழ்ச்சிக்கு பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருட்டிணன்

தமிழகத்தில் மருத்துவ படிப்பு தரமில்லை என பாஜகவினர் கூறி வரும் நிலையில்,பாஜக ஆளும் உத்திரபிரதேச மாநிலத்தில் போதிய மருத்துவ வசதி இல்லாததாலேயே குழந்தைகள் உயிரிழந்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...