பெஸ்ட் பீப்பில்ஸ் காலனி வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் 71-வது சுதந்திர தினம் அனுசரிப்பு


கோவை மாவட்டம், சுப்ரமணியம்பாளையம் பகுதியில் உள்ள பெஸ்ட் பீப்பில்ஸ் காலனி வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் சுதந்திரதின விழா ஆகஸ்ட் 15 அன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 13ம் தேதியன்று குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.



இதனைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், பெஸ்ட் பீப்பில்ஸ் காலனி வெல்ஃபேர் அசோசியேஷன் தலைவர் டி.மோகன் ராஜ் வரவேற்புரையாற்றினார். செயலாளர் ஏ.குமரவேல் மற்றும் உறுப்பினர் கே.சந்திரசேகரன் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வனிதா மணி நந்தகுமார் பங்கேற்றார். 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் கோவை அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இதனைத்தொடர்ந்து, மாலை கலை நிகழ்ச்சிகளும், பரிசு வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து, பெஸ்ட் பீப்பில்ஸ் காலனி வெல்ஃபேர் அசோசியேஷன் பொருளாளர் அசோக் குமார் நன்றியுரையாற்றினார்.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரிக்கால் மற்றும் சிறுதுளி மேலாண்மை இயக்குநர் வனிதா மோகன் நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுடன் கலந்துரையாடி மகிழ்வித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...