விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் ஆலோசனை


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. 



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஊர்வலங்களின் போதும் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும். சிலை வைக்கும் அமைப்பினர் உரிய காவல்துறை அனுமதி பெற்று 24 மணி நேரமும் சிலைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.

விநாயகர் சிலைகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் அனுமதித்துள்ள கரையக்கூடிய சாயத்தை மட்டுமே பூசி இருக்க வேண்டும். காகிதக்கூழ் மற்றும் களி மண்ணால் ஆன சிலைகள் வைக்கப்பட வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரீஸ்களில் சிலை செய்து வைத்து விற்பனை செய்ய கூடாது. இதை கண்காணித்து தேவையான நடவடிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிற மதத்தினரை புண்படுத்தும் விதத்தில் பேசுதல் கூடாது. ஊர்வலங்கள் செல்லும் போது ஒலி எழுப்புவதோ, மேளங்கள் அடிப்பதோ, கோஷங்கள் போடுவதோ கூடாது. ஊர்வலத்தில் தடி,கம்பு மற்றும் ஆயுதங்களை எடுத்து செல்லக் கூடாது. பட்டாசு வெடிக்கவும் அனுமதிக்க கூடாது. சிலைகள் கரைக்கப்படும் குளங்களில் போதிய வெளிச்சம் தரும் மின் விளக்குகளை அமைக்க மின்வாரியமும், மாநகராட்சியும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விநாயகர் சிலை எடுத்துச் செல்லும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சியினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு சென்ற பாதையிலேயே இந்த ஆண்டும் செல்ல வேண்டும். பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர்கள்; 24 மணி நேரமும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். தீயணைப்பு துறையினர், மருத்துவ துறையினர் தயார் நிலையில் இருத்தல் வேண்டும் ஒரு சிறு சம்பவங்கள் கூட இல்லாத வகையில் இந்த விழா நடைபெற அனைத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பான வகையில் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.



இக்கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) லட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், துணை ஆணையர் (கலால்) பாலசுப்பிரமணியன், உதவி ஆட்சியர் சரண்யா ஹரி, வருவாய் கோட்டாட்சியர்கள் மதுராந்தகி, சின்னசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...