திமுக தலைவர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 1500 பெண்களுக்கு சில்வர் குடங்கள் வழங்கிய திமுக அமைப்பு செயலாளர்

திமுக தலைவர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 1500 பெண்களுக்கு சில்வர் குடங்களை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று வழங்கினார்.



திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற பவள விழா, கோவை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பில், மாவட்ட அலுவலகத்தில் மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசுகையில், திமுக ஆட்சியின்போது 2006-ல் இலவசமாக கேஸ் இணைப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதையடுத்து, 11 ஆண்டுகளாக இலவச கேஸ் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது, இந்த திட்டம் ரத்தாகி உள்ளது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு என்ற நிலை மீண்டும் வரப்போகின்றது.

ரேஷன் பொருட்கள் ரத்து, குடிநீர் பிரச்சனை என பெண்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பிரச்சனைகள் தெருமுனை பிரச்சாரங்கள் மூலம் மக்களுக்கு திமுக மகளிரணியினர் கொண்டு செல்ல வேண்டும். விரைவில் உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. இதற்கு பெண்கள் தயாராகிக் கொள்ள வேண்டும் என்றார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 1,500 பெண்களுக்கு சில்வர் குடங்களை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழங்கினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...