ஈச்சனாரி பிரிவில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

கோவை, மதுக்கரை மார்க்கெட் பகுதியை அடுத்த ஈச்சனாரி பிரிவு அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் சுமார் ஒரு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



கோவை, சுந்தராபுரம் மற்றும் மதுக்கரை மார்க்கெட்டிற்கு இடையே ஈச்சனாரி பிரிவு அருகில் புதிதாக மதுபானக்கடை அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி நேற்றைய தினம் அப்பகுதியில் மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மதிமுக கோவை புறநகர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஈச்சனாரி பிரிவு பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, மதுக்கடையை அகற்றம் குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் தங்களிடம் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும், உடனடியாக கடையை மூட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டும் அதிகாரிகள் வராமல் இருந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி டாஸ்மாக் கடையை மூட பரிந்துரை செய்வதாக உறுதியளித்ததையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. 

இதனிடையே மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பல முறை மனு அளித்தும் நேற்றைய தினம் கடையை திறந்து மது  விற்பனை செய்து வருவதாகவும் மீண்டும் கடை திறக்கப்பட்டால் மக்களை ஒன்றிணைந்து பல கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...