விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை இளைஞரின் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற "பசுமை கணபதி"

இயற்கைக்கு எவ்விதத்திலும் தீங்கு ஏற்படுத்தாத வகையில் பசுமையான முறையில் விநாயகர் சதுர்த்தி தினத்தை கொண்டாடுவதற்காக 25 வயதான கோவை இளைஞர் "பசுமை கணபதி" சிலைகளை தயாரித்து விற்பனை செய்துவருகிறார்.

வடவள்ளியைச் சேர்ந்த எலக்டாரிக் பொறியாளர் ஸ்வரஜித் அலகந்தாவே இந்த புதிய முயற்சியில் இயற்கையை காக்கும் நம் கோவை இளைஞர். பெரும்பாலான பகுதிகளில் விற்பனைக்காக அடுக்கப்பட்டுள்ள இரசாயன பூச்சு பூசப்பட்ட, பிளாஸ்டிக் கலவையிலான விநாயகர் சிலைகளை பார்த்தே இதுபோன்ற சுற்றுச்சூழலுக்கு நட்புமிக்க பசுமை கணபதியை தயாரிக்க தூண்டியது என்கிறார் அந்த இளைஞர்.

மேலும் அவர் கூறுகையில், நகரம் முழுவதும் பிளாஸ்டிக் கலவையினால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்கப்பட்டு வரும் சூழலில் களிமண் உள்ளிட்ட இயற்கைக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்பட்ட எனது பசுமை கணபதி சிலைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

அனைத்துத் தரப்பு மக்களும் விரும்பும் வகையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் இந்த விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. "எங்களது இந்த கணபதி சிலைகள் ஒன்று 40 ரூபாய் முதல் 1,100 ரூபாய் வரை என அளவிற்கு தகுந்த வகையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை, வழிபாட்டிற்குப் பின் பொது இடங்களில் புதைத்தாலோ அல்லது நீர் நிலைகளில் கரைத்தாலோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.



"விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. நீரில் உள்ள உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என தொடர்ந்து அரசுத் தரப்பிலும், தன்னார்வலர்கள் தரப்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பாரிஸ் பிளாஸ்டர் மற்றும் ரசாயன வண்ணப்பூச்சுகள் போன்ற மாசுபடுத்தும் பொருள்களால் உருவாக்கப்பட்ட சிலைகள் பெரிய அளவிலான சேதங்களை இயற்கைக்கு ஏற்படுத்தி வருகிறது. களிமண் பயன்படுத்தி நமது பண்டைய முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பசுமை கணபதி மக்கும் தன்மை கொண்டது. அதனால் நகரம் முழுவதும் களிமண் விநாயகர் சிலைகளை மக்கள் பயன்படுத்துவது பாதுகாப்பானது" என்கிறார் ஸ்வர்ஜித்.

இயற்கையை மாசுமடுத்துவதை யாரும் விரும்புவது இல்லை. இருப்பினும் ஒரு சில செயல்களால் நம்மை அறியாமல் பல்வேறு முறைகளில் இயற்கையை சீரழித்து வருகிறோம். அதனை உணர்ந்து மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இவ்வருட விநாயகர் சதுர்த்தியை எவ்வித தீங்கும் இன்றி நல்ல முறையில் சுற்றுச்சூழல் நட்புடன் கொண்டாடுவோம்.

ஸ்வரஜித் அலகந்தின் "பசுமை கணபதி"யினை வாங்கி பயனடைய விரும்புவோர் 9655667775 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பசுமை கணபதியை வாங்கி மகிழலாம்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...