மின்சார வேலிகளால் தொடரும் யானை உயிரிழப்புகள்

நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே கடந்த இரு நாட்களுக்கு முன்பு மின்சாரம் தாக்கி இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்தன. குட்டி யானை ஒன்று, இறந்த தாயை எழுப்ப துடித்தது அதனைக் கண்டோர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பின் உயிரிழந்த யானைகளின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி அதேப் பகுதியில் புதைத்தனர். ஆனால், அப்பகுதியில் இருந்த செல்ல மறுத்து அந்த குட்டியானை அங்கேயே சுற்றி வந்தது. தொடர்ந்து, அதனை வேறு யானைக் கூட்டத்துடன் இணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

இதனிடையே, அதிக மின்சாரம் தாக்கியே அந்த இரு யானைகளும் உயிரிழந்துள்ளது எனக் கண்டறித்த வனத்துறையினர் தொடர்ந்து தலைமறைவாகவுள்ள நில உரிமையாளரை தேடி வருகின்றனர். 

பொதுவாக, இதுபோன்று வனப்பகுதிகளின் அருகே அமைந்துள்ள தனியார் தோட்டங்களில் மின்சார வேலி அமைப்பது யானைகளை குறிவைத்து அல்ல. அவை காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை காக்கவே. 

சட்டப்படி, காட்டுப்பன்றிகளை இவ்வாறு கொலை செய்வதும் ஒரு வகை வேட்டையே. தண்டனைக்குறிய செயல். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள பெரும்பாலான கிராமங்களில் இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் காட்டுப் பன்றிகளை ஓரிருவர் இணைந்து அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி விடுகின்றனர். பெரிதாக வெளியில் தெரிவதில்லை. ஆனால், உடலளவில் பெரிய விலங்கான யானைகள் இவ்வாறான மின்சார வேலியில் சிக்கி உயிரிழக்கும் போது அதனை அப்புறப்படுத்துவதில் ஏற்படும் சிரமங்களால் அவை எளிதில் வெளியில் தெரியவருகிறது.

இதில் குறிப்பாக கவணிக்கப்பட வேண்டியவை என்றால் மின்சார வேலிகள் அமைக்கும் போது பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அவ்வாறாக அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளில் தொடர்ந்து மின்சாரம் பாயாதவாறு முறைப்படுத்த வேண்டும். ஆனால் இதனை நில உரிமையாளர்கள் பின்பற்றாததே யானை உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழக்கக் காரணம். 

துரதிருஷ்டவசமாக, யானைகள் இதுபோன்ற மின்சார வேலியில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும், சில உரிமையாளர்கள் காட்டுப்பன்றி உள்ளிட்டவற்றை வேட்டையாடுவதற்காக வைக்கப்படும் நாட்டு வெடிகுண்டுகளில் சிக்கி யானைகளும் உயிரிழப்பது தொடர்கதையாகத்தான் உள்ளது. 2016-ல் மட்டும், ஆறு யானைகளுக்கு மேல் இதுபோன்ற நாட்டு வெடி குண்டுகளினால் பாதிக்கப்பட்டுள்ளன. கொடூரமாக உயிரிழந்தும் உள்ளன.

இனிவரும் காலங்களினேலும், மனித- விலங்குகளுக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஏனெனில், மனிதர்கள் கூட சமீப காலங்களில் இத்தகைய வேலிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுபோன்ற முறையற்று செயல்படும் வன்முறையாளர்களை அடையாளம் கண்டு தண்டிப்பதற்கும், மனித- விலங்கு மோதல்களுக்கும் ஒரு தீர்வைக் கொண்டுவருவதற்கான முறைகளை அதிகாரிகள் அதிக அளவில் பின்பற்ற வேண்டும். மனிதர்களும் விலங்குகளிடத்தில் கவணம் கொள்ள வேண்டும்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...