வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கோரி மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம்


வால்பாறை பகுதியில் 66 தனியார் தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. அவற்றில், 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவ்வாறு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 247 ரூபாய் மட்டுமே தினக்கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, வால்பறை தேயிலை தோட்டத் தொழிலாளா்களின் வாழ்க்கை மேம்படும் வகையில் கேரளாவிற்கு இணையான சம்பளம் வழங்கிட வேண்டும் என நீண்டகாலமாக அப்பகுதி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக இன்று, வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தியும், முறையாக ஊதியம் வழங்காமல் இழுத்தடித்து வரும் தோட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், கேரள தோட்டத் தொழிலாளா்களுக்கு கிடைக்கும் சம்பளத்தைவிட மிக குறைவான சம்பளத்திற்கு ஒப்புக்கொண்டு 05.07.2017 -ம் தேதி தொழிலாளா்களுக்கு விரோதமாக துரோக ஒப்பந்தம் செய்தவா்களைக் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினா் சி.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் வி.கஸ்தூரிவாசு முன்னிலை வகித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட வால்பாறை தோட்டத் தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...