கேரள அரசு கட்டிவரும் தடுப்பணையை தடுத்து நிறுத்தக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு

கேரள அரசு கட்டிவரும் தடுப்பணைகளை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்தக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரம் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் நீராதாரங்கள் முற்றிலும் தமிழ்நாட்டிற்கு வருவதை தடுக்கும் நோக்கில் கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சகண்டி பகுதிகளில் ஏற்கனவே தடுப்பணை கட்டியுள்ளது.

மேட்டுப்பாங்கான பகுதிகளுக்கு ஆற்றுநீரை எடுத்துக் கொள்வதற்கு பம்ப்ஹவுஸ் கட்டப்பட்டுள்ளது. தற்சமயம் கேரள அரசு பாடவயல், சீரக்கடவு, சாடிவயல் சாளையூர் தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கையினை துவங்கியுள்ளது.

கோவை மற்றும் கொங்கு மண்டல மக்கள் பல்வேறு அமைப்புகள் அரசுக்கு போராட்ட வடிவில் செய்திகள் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கேரள அரசின் இத்தகைய முறையினை தடுக்க தமிழக அரசு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் மூலமும், தமிழக அரசு இத்தகைய கட்டுமான பணிகளை செய்யக்கூடாது என்று தடையாணை பெற வேண்டும். தொடர்ந்து, பவானி ஆற்றுப்படுகையில் கேரள அரசு தடுப்பணைகள் கட்டிவிட்டால் கொங்கு மண்டலம் கடுமையான நீர் அற்ற மக்கள் வாழும் பகுதியாக மாறும்.

விவசாயம், கால்நடை வளர்ப்பு முற்றிலும் அழிவை நோக்கி சென்றுவிடும். கடுமையான வறட்சி குடிநீர் கட்டுப்பாடு விவசாயம் பாதிப்படைந்து வரும் நிலையில் இதைத் தடுக்க தமிழக அரசு உடனே முன்வர வேண்டும்.

தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கண்ட இடங்களில் கள ஆய்வு செய்து உண்மைத் தன்மையினை தமிழக அரசுக்கு எழுத்துப் பூர்வமாக தெரிவுபடுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...