கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த மரங்களை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ அடுத்துள்ள காமராஜர் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மில் அருகே இருந்த மரங்களை நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் வெட்டினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மீதமுள்ள மரங்கள் வெட்டப்படுவது நிறுத்தப்பட்டது.



இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

தனியார் மில் அருகே சாலை ஓரத்தில் இருந்த மரங்களால் எந்த ஒரு பாதிப்பும் இல்லாத நிலையில் இந்த மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் எதற்கு வெட்ட வேண்டும். தனியார் மில்லின் காம்பவுண்ட் அருகில் ஏ.டி.எம் இயந்திரம் அமைக்க பணி மேற்கொண்டபோது மரத்தின் வேர் பாதிக்கப்பட்டு மரம் சாய்ந்துவிட்டதாக மரம் வெட்டியவர்கள் கூறுகின்றனர். இது குறித்து மில் நிர்வாகத்திடம் கேட்டபோது மரத்தை அகற்ற தாங்கள் சொல்லவில்லை என தெரிவிக்கின்றனர். இவ்வாறு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 



இதனைத் தொடர்ந்து மரங்களை வெட்ட வந்தவர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து 5 மரங்கள் வெட்டப்பட்டிருந்த நிலையில் மீதமுள்ள 3 மரங்களை வெட்டாமல் வெட்டபட்ட கிளைகளை மட்டும் நெடுஞ்சாலைத் துறையினர் அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பரபரப்பு நிலவியது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...