17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பினர் வேலை நிறுத்தம்

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வங்கப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியினை கைவிட வேண்டும். வங்கிகள் இணைப்பு முயற்சியை கைவிட வேண்டும். கார்ப்பரேட்டுகளிடம் இருந்து வராக்கடன்களை வசூல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். 

இதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி முன்பாக அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த போராட்டம் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள 350-க்கும் மேற்பட்ட வங்கிகளில் 95 சதவிகித வங்கி பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 2000 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் 20,000 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏறபட்டு இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் தொடர்போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் வங்கி ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...