மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டு சிறை

கோவையில், மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு சாய்பாபா காலனி பாரதி பார்க் பகுதியில் நடை பயனம் சென்று கொண்டிருந்த கவுதாமினி (60) என்ற மூதாட்டியின் கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் நகையை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இது குறித்து கவுதாமணி, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இது தொடர்பாக இருகூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் கார்த்தி என்கின்ற பங்க் கார்த்தி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மனோஜ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில் இவ்விருவரும் சேர்ந்தே செயின் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து இவர்கள் கோவை 7-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டி, இவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...