மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டு சிறை

கோவையில், மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு சாய்பாபா காலனி பாரதி பார்க் பகுதியில் நடை பயனம் சென்று கொண்டிருந்த கவுதாமினி (60) என்ற மூதாட்டியின் கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் நகையை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இது குறித்து கவுதாமணி, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இது தொடர்பாக இருகூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் கார்த்தி என்கின்ற பங்க் கார்த்தி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மனோஜ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில் இவ்விருவரும் சேர்ந்தே செயின் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து இவர்கள் கோவை 7-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டி, இவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...