அக்காவிடம் பெற்ற பணத்தை திருப்பித் தராத தம்பிக்கு சிறைத் தண்டனை

அக்காவிடம் பெற்ற பணத்தை திருப்பி தராமல் ஏமற்றிய தம்பிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாயை திருப்பித் தரக் கூறி கோவையில் நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

கோவை சவுரிபாளையம் ஜி.வி.ரெசிடன்சி பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி தனது தம்பி தாமோதரன் பணம் கேட்டதையடுத்து அவருக்கு 4 லட்ச ரூபாயை கடந்த 2014-ம் ஆண்டு கொடுத்துள்ளார். பின்னர் பணத்தை விஜயலட்சுமி திருப்பி கேட்டபோது தான் பணம் பெறவில்லை என தாமோதரன் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விஜலட்சுமி தனது தம்பி மீது சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து தாமோதரன் மற்றும் அவரது மனைவி சுந்தரமணி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று ஜெ.எம் 3 நீதிபதி வேலுசாமி தீர்ப்பு வழங்கினார். அதன்படி தாமோதரனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாயை திருப்பி அளிக்க உத்தரவிட்டார்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...