அக்காவிடம் பெற்ற பணத்தை திருப்பித் தராத தம்பிக்கு சிறைத் தண்டனை

அக்காவிடம் பெற்ற பணத்தை திருப்பி தராமல் ஏமற்றிய தம்பிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாயை திருப்பித் தரக் கூறி கோவையில் நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

கோவை சவுரிபாளையம் ஜி.வி.ரெசிடன்சி பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி தனது தம்பி தாமோதரன் பணம் கேட்டதையடுத்து அவருக்கு 4 லட்ச ரூபாயை கடந்த 2014-ம் ஆண்டு கொடுத்துள்ளார். பின்னர் பணத்தை விஜயலட்சுமி திருப்பி கேட்டபோது தான் பணம் பெறவில்லை என தாமோதரன் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விஜலட்சுமி தனது தம்பி மீது சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து தாமோதரன் மற்றும் அவரது மனைவி சுந்தரமணி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று ஜெ.எம் 3 நீதிபதி வேலுசாமி தீர்ப்பு வழங்கினார். அதன்படி தாமோதரனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாயை திருப்பி அளிக்க உத்தரவிட்டார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...