பொது தேர்தல் நடந்தால் தான் மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் -மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேரின் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிக்கைக்கு பின்னரும் தமிழக கவர்னர் தொடர்ந்து அமைதி காப்பது ஏன் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு வீணாவதற்கு காரணமான இருக்கும்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகு வேண்டும் என வலியுறுத்தினார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிக்கை வைத்த பின்னரும் ஆளுனர் தொடர்ந்து அமைதி காப்பது ஏன் என கேள்வி எழுப்பியவர், தமிழக அரசியல் சூழல் தெரிந்தும் ஆளுனர் மும்பை சென்றுள்ளதில் உள்நோக்கம் இருப்பதாக கருவதாகவும், இது பல விதமான சந்தேகங்களை எழுப்புகிறது என தெரிவித்தார்.

பொது தேர்தல் நடக்க வேண்டும், அப்போது தான் மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் என சுட்டிக் காட்டினார். சபாநாயகர் தனபால் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை, குழப்பத்தில் ஆதாயம் தேடும் சூழல் என குற்றம்சாட்டிய அவர், திருமாவளவன் அதை வரவேற்பது சரியல்ல என தெரிவித்தார். 

சாதியின் அடிப்படையில் முதல்வர் நியமனம் செய்வது தகுந்ததள்ள எனவும், இரு அணிகள் இணைப்பு என்பது நாடகமே என புகார் கூறினார். சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்றதாக வெளிவரும் வீடியோ பொய்யாக இருக்க வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...