காரைக்கால் - பெங்களூரு பயணிகள் ரயில் விபத்தில் பயணிகள் உயிர்தப்பினர்

இன்று காலை 11.47 மணியளவில் விருத்தாசலம் சேலம் பயணிகள் ரயில் எண்.76850 ஆத்தூர் சின்னசேலம் இடையே ஆளியக்கமற்ற லெவல் கிராசிங்கை கடக்கும் போது, டிரெயிலர் கொண்ட ஒரு டிராக்டர் அவசரமாக லெவல் கிராசிங்கை கடக்க முற்பட்டு ரயிலின் பின்புறம் உள்ள எஞ்சின் பகுதியை சேதப்படுத்தியது. 



இதனால் அந்த டிராக்டரின் டிரெயிலர் தனியாக பிரிந்தது. டிராக்டர் ஓட்டி வந்தவர் தனது டிராக்டரை விரைவாக ஓட்டி சம்பவ இடத்தில் இருந்து அகன்று விட்டார். ரயிலின் இயக்குநர் டிராக்டர் ஓட்டி தனது காதில் மொபைல் போன் ஹெட்செட் போட்டுக் கொண்டு வந்ததால் ரயில் சத்தத்தை கவனிக்காமல் விரைவாக வந்து ரயிலில் மோதியதாக தெரிவித்துள்ளார்.  



மதியம் 01.05 மணிக்கு சேலத்தில் இருந்து மீட்புப்பணிகளுக்காக ஒரு ரயில் அனுப்பப்பட்டு அது தற்போது சேதமான ரயில் நிறுத்தப்பட்டுள்ள சின்னசேலம் ரயில்நிலையம் சென்றடைந்துள்ளது. திருச்சி பொன்மலை ரயில்பணிமனையில் இருந்து பொறியாளர்கள் சேதமான ரயிலை ஆய்வு செய்து வருகின்றனர். ஆராய்ந்து அதை அப்படியே எடுத்து வர முடியுமா அல்லது சேதமான பகுதியை நீக்கி விட்டு எடுத்து வர முடியுமா என்று முடிவு செய்வார்கள். 



இந்த விபத்தால், காரைக்கால் பெங்களூரு பயணிகள் ரயில் எண் 56513 சின்னசேலத்தில் நிறுத்தப்பட்டு தற்போது சுமார் 2 மணி நேரம் தாமதமாக சேலம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த விபத்தால் யாருக்கும் காயம் உயிரிழப்பு ஏதுமில்லை எதுவும் ஏற்படவில்லை. 

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...