வாலிபர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவையில் கடந்த 2015-ம் ஆண்டு வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை குண்டு வெடிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் செங்காடு பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவரது மகன் ராஜேஷ்குமார். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆவாரம்பாளையம் ராமகிருஷ்ணா மருத்துவமனை சந்திப்பு பகுதியில் 7 பேர் கொண்ட இளைஞர் கும்பலால் சரமாரியாக ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயங்களுடன் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி ராஜேஷ்குமார் உயிரிழந்ததையடுத்து அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி அவரை தாக்கிய 7 பேரை பந்தையசாலை காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இது தொடர்பான வழக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, வழக்கில் தொடர்புடைய பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ஏழு பேரில் ராமகிருஷ்ணன், அஜித்குமார், கார்த்திக், சக்திவேல் மற்றும் அருண்பாண்டி உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டணை வழங்கி நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...