தாய் சேய் நல பதிவுகளை கணினியில் பதிவேற்றுவதைக் கண்டித்து கிராம சுகாதார செவிலியர்கள் போராட்டம்

தாய் சேய் நல பதிவுகளை கணினியில் பதிவேற்றம் செய்யும் புதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சுகாதார செவிலியர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனர்.

கடந்த 10 ஆண்டுகளாக தாய் சேய் நல பதிவுகளை கணினியில் பதிவேற்றம் செய்யும் பிக்மி (pregnant infant chart monitoring evaluation) முறையை மாற்றி குடும்ப பதிவேடு மற்றும் தகுதியான இணை முறையை பதிவேற்றம் செய்ய சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.

இப்போது சுகாதாரத் துறை நடைமுறைப்படுத்தி உள்ள முறையால் கர்பிணி பெண்ணின் பெயர், கணவர் பெயர், முழு உடல் பரிசோதனை விபரம், குழந்தை பிறந்த விபரங்கள் உள்ளிட்டவைகளை கணினியில் பதிவேற்றம் செய்ய சுகாதார துறை உத்தரவால் செவிலியர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், இந்த முறையினை கைவிட்டு பழைய முறையையே அமல்படுத்த வேண்டுமெனவும் கிராம சுகாதார செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...