நாடு முழுவதும் கலைகட்டிய விநாயகர் சதுர்த்தி- கோவில்களில் சிறப்பு பூஜை

தேசிய அளவில் கொண்டாடப்படும் இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி இன்று சிறப்பான முறையில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கோவையில் விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு கோவில்களில் சிறப்புப் பூஜைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலை நிறுவப்பட்டு வழிபாடும் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, கோவையில் விநாயகருக்கு என பிரசிதிபெற்ற ஈச்சனாரி மற்றும் புளியகுளம் விநாயகர் கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி சிறப்பு தரிசனத்தை கண்டு வழிபட்டு வருகின்றனர். 



மேலும், விநாயகருக்கு மிகவும் பிடித்த உணவாக கருதப்படும் அரிசி மாவு மூலம் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளும், எருக்கம் பூவினாலான மாலையும் அணிவித்து கொண்டாடி வருகின்றனர்.



இதில் குறிப்பாக, வழக்கம்போல் இரசாயன பூச்சுக்களாலும், பிளாஸ்டிக் கலவையினாலும் செய்யப்பட்ட விநாயகர் சிலை அல்லாமல் இயற்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளே கோவை மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன.



மேலும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த வரலாற்று சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு எதிர்ப்பின் வெற்றியைக் குறிக்கும் வகையில் 'ஜல்லிக்கட்டு விநாயகர்' சிலை தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.



விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பினரால் பெரும்பாலான பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வரும் ஆகஸ்ட் 27 அன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்க திட்டமிடப்பட்டுள்ளன.



Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...