மின்சக்தியில் சிக்கன செயல் திறன் கொண்ட புதுவகை ஏர் கம்ப்ரஷர் அட்லஸ்கோப்கோ கோவையில் அறிமுகம்

காற்றழுத்த தொழில்நுட்பம், வெற்றிடத்தை உருவாக்கும் பம்ப், கேஸ் ஜெனரேட்டர்களில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் அட்லஸ் கோப்கோ கம்ப்ரசர்கள் இந்தியாவில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த ஏர் கம்ப்ரஷர்களை பல்வேறு தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து சேவையாற்றி வருகிறது.

‘மேக் இன் இன்டியா’ அரசின் அழைப்புக்கு ஏற்ப, புனேயில் உள்ள அட்லஸ் கோப்கோ ஏர் கம்ப்ரஷர் தொழிற்சாலையில், உலக புகழ் பெற்ற, மின் சிக்கனத்துடன் கூடிய பல்வேறு வேகத்தில் இயங்கும் கம்ப்ரஷர்களை தயாரிக்கிறது. கம்ப்ரஷர் காற்று தொழிற்சாலையில் மாபெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. 

தற்போது, ஆகஸ்ட் 23ல் கோவையில் அட்லஸ் கோப்கோ கம்ப்ரஷர் தொழில்நுட்ப வணிகத்தின் இந்திய பொதுமேலாளர் மற்றும் தலைவர் கன்ரட் லதம் வருகையும் வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இந்த நிகழ்வின்போது வாடிக்கையாளர்களுக்கு மின்சேமிப்புடன், உற்பத்தியை பெருக்கும் தொழில்நுட்ப செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.



கோவையில் வாடிக்கையாளர்களை சந்தித்து ‘பார்ப்பதை நம்புங்கள்’ என்ற தத்துவத்துடன், மதிப்புமிக்க தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் நேரடியாக செயல் விளக்கங்கள் தரப்பட்டன. அவர்களது தொழில் வளர்ச்சிக்கு நிலையான ஆதரவு தரும் பல்வேறு தொழில்நுட்பங்கள் முதல் முறையாக பார்வைக்கு வைக்கப்பட்டன. இந்நிகழ்வின் போது கன்ரட் லதம் பேசுகையில், ‘‘இந்தியாவில் எங்களது வாடிக்கையாளர்களின் வளர்ச்சியானது, எங்களுக்கு உயிர் மூச்சு போன்றது,’’ என்றார்.



பொது இன்ஜினியரிங், ஆட்டோமோட்டிவ், உற்பத்தி, ஜவுளி, மருந்துகள், உணவு, வாகனம், இரும்பு மற்றும் ஸ்டீல், எரிசக்தி மற்றும் பிற தொழில் முறைகளிலும் காற்றழுத்தம் தொழில்நுட்பம் அவசியமாகிறது.

சந்தையில் முன்னணி வகிக்கும் காற்று தயாரிப்புகள் மட்டுமின்றி வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற வகையில் காற்றழுத்த தயாரிப்புகளை தருகிறது அட்லஸ் கோப்கோ. ஆயில் அழுத்த ஸ்க்ரூ ஏர் கம்ப்ரஷர், ஆயில் இல்லா ஏர் கம்ப்ரஷர், ஸ்க்ரூ புளோயர்கள், ஸ்க்ரோல் ஏர் கம்ப்ரஷர்கள், டூத் ஏர் கம்ப்ரஷர், பிஸ்டன் ஏர் கம்ப்ரஷர், டர்போ ஏர் கம்ப்ரஷர், வாட்டர் இன்ஜெக்டெட் ஸ்க்ரூ ஏர் கம்ரஷர், ரெசிப்ரோகேட்டிங் ஏர் கம்ப்ரஷர் மற்றும் பிற வகை கம்ப்ரஷர்கள் இதன் தயாரிப்புகளில் உதாரணங்கள் ஆகும்.



Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...