முன்னாள் விஞ்ஞானி பெயர் சூடப்பட்ட "புதிய தவளை" இனம்


மேற்கு தொடர்ச்சி மலைகளின் கிழக்குச் சரிவில் புதிய ஊதா தவளை இனம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தவளைக்கு சலீம் அலி ஆர்னிதாலஜி ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய எஸ்.பூபதி என்னும் விஞ்ஞானியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

எஸ்.பூபதி, அகஸ்திய மலையில் இதுகுறித்தான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



தவளை மற்றும் ஆம்ஃபிபியன்ஸ் பிரிவு குறித்தான பத்திரிகையில் இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஊதா வகை தவளை இனத்தை கண்டறிந்தவர் ஜனனி என்றும், அதனை ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஒரு நீர்நிலையில் கண்டறிந்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.



பூபதி எனும் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வகை தவளை அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் என்றும், மேலும், இந்த தவளை இனத்தின் தங்கையாக என்.சாஹயாட்ரென்சிஸ் வகை உள்ளதையும் கண்டறிந்துள்ளனர். இந்த இரு தவளை இனத்திற்கும் உள்ள வேறுபாட்டை உடலளவிலும், வடிவமைப்பினைக் கொண்டும் அடையாளம் காணப்படுகிறது. அறிதாக காணப்பட்டுள்ள இந்த தவளை இனத்தினை அதிகரிக்கும் வகையில் ஆராய்ச்சி நிலையத்தில் இனப்பெருக்கம் செய்யப்பட்டு ஈரப்பதம் நிறைந்த நீர்நிலை அருகில் விடப்பட்டுள்ளது.

மேலும், இந்த தவளை எந்தெந்த பகுதியில் உள்ளனவென்றும், எவ்வளவு எண்ணிக்கையில் இது உள்ளது என்றும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களிலேயே இது குறித்தான ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது.

என்.பூபதி என்னும் இந்த தவளை இனத்தை நீர்நிலைகள் நிறைந்த வனப்பகுதிகளிலேயே கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஏனெனில், இத்தவளை வனப்பகுதியினை விட்டு பொதுமக்கள், மலைத்தொடர்களில் உள்ள கோவில்களுக்குச் செல்லும் பக்தர்கள் பாதையில் குறிக்கிடும் போது இதற்கு இடர்பாடுகள் ஏற்படும் என கருதப்படுகிறது.



மேலும், பக்தர்கள், பொதுமக்கள் மூலம் சமீபகாலமாக நீர்நிலைகள் அசுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, ஒரு குறிப்பிட்ட நீர்நிலைகளின் அருகிலேயே இதனை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என இதுகுறித்து வெளியான பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...