முன்னாள் விஞ்ஞானி பெயர் சூடப்பட்ட "புதிய தவளை" இனம்


மேற்கு தொடர்ச்சி மலைகளின் கிழக்குச் சரிவில் புதிய ஊதா தவளை இனம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தவளைக்கு சலீம் அலி ஆர்னிதாலஜி ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய எஸ்.பூபதி என்னும் விஞ்ஞானியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

எஸ்.பூபதி, அகஸ்திய மலையில் இதுகுறித்தான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



தவளை மற்றும் ஆம்ஃபிபியன்ஸ் பிரிவு குறித்தான பத்திரிகையில் இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஊதா வகை தவளை இனத்தை கண்டறிந்தவர் ஜனனி என்றும், அதனை ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஒரு நீர்நிலையில் கண்டறிந்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.



பூபதி எனும் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வகை தவளை அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் என்றும், மேலும், இந்த தவளை இனத்தின் தங்கையாக என்.சாஹயாட்ரென்சிஸ் வகை உள்ளதையும் கண்டறிந்துள்ளனர். இந்த இரு தவளை இனத்திற்கும் உள்ள வேறுபாட்டை உடலளவிலும், வடிவமைப்பினைக் கொண்டும் அடையாளம் காணப்படுகிறது. அறிதாக காணப்பட்டுள்ள இந்த தவளை இனத்தினை அதிகரிக்கும் வகையில் ஆராய்ச்சி நிலையத்தில் இனப்பெருக்கம் செய்யப்பட்டு ஈரப்பதம் நிறைந்த நீர்நிலை அருகில் விடப்பட்டுள்ளது.

மேலும், இந்த தவளை எந்தெந்த பகுதியில் உள்ளனவென்றும், எவ்வளவு எண்ணிக்கையில் இது உள்ளது என்றும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களிலேயே இது குறித்தான ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது.

என்.பூபதி என்னும் இந்த தவளை இனத்தை நீர்நிலைகள் நிறைந்த வனப்பகுதிகளிலேயே கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஏனெனில், இத்தவளை வனப்பகுதியினை விட்டு பொதுமக்கள், மலைத்தொடர்களில் உள்ள கோவில்களுக்குச் செல்லும் பக்தர்கள் பாதையில் குறிக்கிடும் போது இதற்கு இடர்பாடுகள் ஏற்படும் என கருதப்படுகிறது.



மேலும், பக்தர்கள், பொதுமக்கள் மூலம் சமீபகாலமாக நீர்நிலைகள் அசுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, ஒரு குறிப்பிட்ட நீர்நிலைகளின் அருகிலேயே இதனை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என இதுகுறித்து வெளியான பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...