காவிரி அணை மற்றும் நீட் தேர்வு விவகாரத்தை முன்வைத்து திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காவிரியில் கர்நாடக அரசு அணை கட்ட நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்தது, நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்கள் ஏமாற்றப்பட்டது ஆகிய விவகாரங்களில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையை கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் கோவை புறநகர் மவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்பட்ட தமிழக அரசை கண்டித்தும், நீட் தேர்வில் தமிழக மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றிய மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பபட்டது. 

பின்னர் பேசிய, திராவிடர் கழக நிர்வாகிகள் காவிரி விவகாரம், நீட் விவகாரம் ஆகிய இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் மாநில அளவில் நடைபெறுவதாக தெரிவித்தனர். கர்நாடகத்தில் மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழக வழகறிஞர்கள் ஒப்புதல் கொடுததும், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றியதும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார். 

மேலும், நீட் தேர்வின் மூலம் மருத்துவப் படிப்பில் சி.பி.எஸ்.சி பாடப்பிரிவில் படித்த மாணவர்கள் அதிகமாகவும் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் குறைவாகவும் சேர்ந்து இருப்பதாகவும், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தங்களுக்கான மருத்துவப்டிப்பிற்கான வாய்ப்புகளை இழந்து இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினர்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...