நீலகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர்-ன் நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கான பந்தக்கால் நடும் விழா

நீலகிரி மாவட்டம் உதகை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா முன்னிலையில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் ஆகியோர் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா 11.09.2017 அன்று கொண்டாடுவதற்கான பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. 



முன்னதாக, உதகை தமிழகம் விருந்தினார் மாளிகையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், புரட்சித்தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் நூற்றாண்டு விழா மாவட்டத்தில் வரும் 11.09.2017 அன்று நடைபெறவுள்ளதை தொடர்ந்து, அதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், அமைச்சர் பெருமக்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நூற்றாண்டு விழா தொடர்பாக நடைபெற்ற போட்டிகள் குறித்தும், விழா ஏற்பாடுகள் குறித்தும், நலத்திட்ட உதவிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சிகளில் மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.ஆர்.அர்ஜுணன் மற்றும் ஏ.கே.செல்வராஜ், பாராளுமன்ற உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...