அடிப்படி சலுகைகள் இல்லாமல் வால்பாறை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அவதி

வால்பாறையை அடுத்துள்ள மஹாவீரன் பிளாண்டேனுக்கு சொந்தமான ஹைபாரஸ்ட் மற்றும் வாகமலை ஆகிய இரண்டு தேயிலை தோட்டங்கள் உள்ளது. இதில் சுமார் 150க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பணி ஓய்வு ஊதியம், வருங்கால வைப்புநிதி, போனஸ் ஆகியவை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கவில்லை என்று தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேயிலை வாரிய அதிகாரிகள் முன்னிலையில் தீர்வு எட்டவில்லை. 

இந்நிலையில், யூனியன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் உத்தரவின்படி ஒரு குழு அமைக்கப்பட்டு குன்னூரை தலைமையிடாக கொண்ட இந்திய தேயிலை வாரிய செயல் அதிகாரி பால்ராஜ் ஐ.ஏ.எஸ். தலைமையில் உதவி தேயிலை வாரிய அதிகாரிகளான ஹரிபிரியா, ஜார்ஜ் சாமுவேல், வால்பாறை தேயிலை தோட்ட ஆய்வாளர் முகமது யூசப் மற்றும் வால்பாறை ஹைபாரஸ்ட் எஸ்டேட் நேரடியாக ஆய்வு செய்து தோட்ட தொழிலாளர்களுக்கு குடிநீர் வசதி, சுகாதார வசதி, ஓய்வூதியம், மருத்துவ விடுப்பு சலுகை, வீட்டு மராமத்து பணிகள் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் செய்து தர வேண்டும் என்று ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு விரைவில் மேற்கூறிய சலுகைகள் உடனடியாக செய்து தர வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



தொழிலாளர்கள் தரப்பிலும் பல்வேறு குறைகள் இக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதுகுறித்து மஹாவீர் பிளாண்டேன் உரிமையாளர் டி.பன்சலி கூறுகையில், மேற்குறிப்பிட்டுள்ள குறைகள் அனைத்தும் 15 நாட்களில் தீர்க்கப்படும் என்று கூறினார். இந்த ஆய்வின் போது தொழிற்சங்க தலைவர்களும் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...