அடிப்படி சலுகைகள் இல்லாமல் வால்பாறை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அவதி

வால்பாறையை அடுத்துள்ள மஹாவீரன் பிளாண்டேனுக்கு சொந்தமான ஹைபாரஸ்ட் மற்றும் வாகமலை ஆகிய இரண்டு தேயிலை தோட்டங்கள் உள்ளது. இதில் சுமார் 150க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பணி ஓய்வு ஊதியம், வருங்கால வைப்புநிதி, போனஸ் ஆகியவை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கவில்லை என்று தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேயிலை வாரிய அதிகாரிகள் முன்னிலையில் தீர்வு எட்டவில்லை. 

இந்நிலையில், யூனியன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் உத்தரவின்படி ஒரு குழு அமைக்கப்பட்டு குன்னூரை தலைமையிடாக கொண்ட இந்திய தேயிலை வாரிய செயல் அதிகாரி பால்ராஜ் ஐ.ஏ.எஸ். தலைமையில் உதவி தேயிலை வாரிய அதிகாரிகளான ஹரிபிரியா, ஜார்ஜ் சாமுவேல், வால்பாறை தேயிலை தோட்ட ஆய்வாளர் முகமது யூசப் மற்றும் வால்பாறை ஹைபாரஸ்ட் எஸ்டேட் நேரடியாக ஆய்வு செய்து தோட்ட தொழிலாளர்களுக்கு குடிநீர் வசதி, சுகாதார வசதி, ஓய்வூதியம், மருத்துவ விடுப்பு சலுகை, வீட்டு மராமத்து பணிகள் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் செய்து தர வேண்டும் என்று ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு விரைவில் மேற்கூறிய சலுகைகள் உடனடியாக செய்து தர வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



தொழிலாளர்கள் தரப்பிலும் பல்வேறு குறைகள் இக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதுகுறித்து மஹாவீர் பிளாண்டேன் உரிமையாளர் டி.பன்சலி கூறுகையில், மேற்குறிப்பிட்டுள்ள குறைகள் அனைத்தும் 15 நாட்களில் தீர்க்கப்படும் என்று கூறினார். இந்த ஆய்வின் போது தொழிற்சங்க தலைவர்களும் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...