கோவையில் மக்கிய பொருட்களிலிருந்து மக்கும் பைகள் மற்றும் தாள்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி பட்டறை

கோவை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் மற்றும் இந்திய பிளாஸ்டிக் நிறுவனம் கோவை அத்தியாயம் இணைந்து நடத்தும் மக்கிய பொருட்களிலிருந்து தாவர மூலப்பொருட்களான மக்கும் பைகள் மற்றும் தாள்கள் தயாரிப்பு முறைகள் குறித்து கோவை உற்பத்தி நிறுவனங்களுக்கு பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது.

கோவை மாநகராட்சியை பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் இல்லாத நகரமாக்குவதற்காக கோவை மாநகராட்சி சார்பாக ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கோவை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் மற்றும் இந்திய பிளாஸ்டிக் நிறுவனம் கோவை அத்தியாயம் இணைந்து நடத்தும் மக்கிய பொருட்களிலிருந்து தாவர மூலப்பொருட்களான மக்கும் பைகள் மற்றும் தாள்கள் தயாரிப்பு முறைகள் குறித்து கோவை உற்பத்தி நிறுவனங்களுக்கு பயிற்சி பட்டறை ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி மாலை 6 மணி முதல் 9 மணி வரை கோவையில் நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி பட்டறையில் புதிய முறைகள் மூலம் தாவர மூலப்பொருட்களான மக்கும் பைகள் மற்றும் தாள்கள் தயாரிக்க உற்பத்தியாளர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படும். இதன் மூலம் வளிமண்டலத்தை மாசுபடுத்துகின்ற வழக்கமான பாலித்தீன் பைகள் உற்பத்தி செய்வது குறைக்கப்படும். உற்பத்தியாளர்கள் தங்களிடம் தற்போதுள்ள இயந்திரங்கள் மூலமாக மக்கும் பைகள் தயாரிப்பதற்கான தேவையான பயிற்;சிகள் அளிக்கப்படும். இந்த புதிய முறையை பயன்படுத்துவது மூலம் சிறிய உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான மக்கும் பைகளை குறைந்த விலையில் தயாரித்துக்கொள்ளலாம். 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நிறுவனங்கள் தகவல் தெரிந்துகொள்வதற்கு எஸ்.சீனிவாசன் அவர்களை 9994859966 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் [email protected] மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். 

முதலில் வரும் 100 உற்பத்தி நிறுவனங்களுக்கு இருக்கைகளில் முன்னுரிமை வழங்கப்படும். கோவை ஸ்மார்ட் சிட்டி லிமிடடின் இந்த புதிய முயற்சியில் கோவை உற்பத்தி நிறுவனங்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...