கோவையில் மக்கிய பொருட்களிலிருந்து மக்கும் பைகள் மற்றும் தாள்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி பட்டறை

கோவை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் மற்றும் இந்திய பிளாஸ்டிக் நிறுவனம் கோவை அத்தியாயம் இணைந்து நடத்தும் மக்கிய பொருட்களிலிருந்து தாவர மூலப்பொருட்களான மக்கும் பைகள் மற்றும் தாள்கள் தயாரிப்பு முறைகள் குறித்து கோவை உற்பத்தி நிறுவனங்களுக்கு பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது.

கோவை மாநகராட்சியை பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் இல்லாத நகரமாக்குவதற்காக கோவை மாநகராட்சி சார்பாக ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கோவை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் மற்றும் இந்திய பிளாஸ்டிக் நிறுவனம் கோவை அத்தியாயம் இணைந்து நடத்தும் மக்கிய பொருட்களிலிருந்து தாவர மூலப்பொருட்களான மக்கும் பைகள் மற்றும் தாள்கள் தயாரிப்பு முறைகள் குறித்து கோவை உற்பத்தி நிறுவனங்களுக்கு பயிற்சி பட்டறை ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி மாலை 6 மணி முதல் 9 மணி வரை கோவையில் நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி பட்டறையில் புதிய முறைகள் மூலம் தாவர மூலப்பொருட்களான மக்கும் பைகள் மற்றும் தாள்கள் தயாரிக்க உற்பத்தியாளர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படும். இதன் மூலம் வளிமண்டலத்தை மாசுபடுத்துகின்ற வழக்கமான பாலித்தீன் பைகள் உற்பத்தி செய்வது குறைக்கப்படும். உற்பத்தியாளர்கள் தங்களிடம் தற்போதுள்ள இயந்திரங்கள் மூலமாக மக்கும் பைகள் தயாரிப்பதற்கான தேவையான பயிற்;சிகள் அளிக்கப்படும். இந்த புதிய முறையை பயன்படுத்துவது மூலம் சிறிய உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான மக்கும் பைகளை குறைந்த விலையில் தயாரித்துக்கொள்ளலாம். 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நிறுவனங்கள் தகவல் தெரிந்துகொள்வதற்கு எஸ்.சீனிவாசன் அவர்களை 9994859966 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் [email protected] மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். 

முதலில் வரும் 100 உற்பத்தி நிறுவனங்களுக்கு இருக்கைகளில் முன்னுரிமை வழங்கப்படும். கோவை ஸ்மார்ட் சிட்டி லிமிடடின் இந்த புதிய முயற்சியில் கோவை உற்பத்தி நிறுவனங்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...