வால்பாறை எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் நுழைவதை கட்டுப்படுத்தக் கோரி மலைப்பாதையில் மக்கள் மறியல்


வால்பாறை கருமலை ௭ஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை நுழைந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில், வேலுசாமி ௭ன்னும் தோட்ட தொழிலாளி, அந்த காட்டு யானை தாக்கியதில் ௨யிரிழந்தார். 

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று பொள்ளாச்சி- வால்பாறை மலைப்பாதையில் மறியலில் ஈடுபட்டனர்.



40 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைச்சாலையில், கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாமல் மாறியலில் ஈடுபட்ட மக்களால் அச்சாலை வழியாக செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகினர். 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், வால்பாறை எஸ்டேட் பகுதியில் தொடர்ந்து யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருகிறது. உயிரிழப்புகளும் அவ்வப்போது ஏற்படுகிறது. இதுகுறித்து வனத்துறையினரிடம் புகார் அளித்தாலும் முறையாக நடவடிக்கை மேற்கொள்வதில்லை. அந்த காட்டு யானையை பிடிக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...