மாநகராட்சி ஆணையர் அறிவுரையின்படி பள்ளி, கல்லூரிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அறிவுரையின்படி மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு கவனம் செலுத்தி டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாநகராட்சியில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை ஆணையர் அறிவுரையின்படி மாநகராட்சி நகர்நல அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் பல்வேறு சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, இன்று (ஆகஸ்ட் 28) மாநகராட்சி மத்திய மண்டலத்தில், 25, 45, 50, 51, 54, 80, 81, 82, 83, 84 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட 12 பள்ளிகளிலும், தெற்கு மண்டலத்தில், 76, 78, 86, 87, 89, 90, 91, 92, 94, 95, 96, 100 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட 24 பள்ளிகளிலும், வடக்கு மண்டலத்தில், 3, 4, 27, 28, 38, 39, 42, 44 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட 11 பள்ளிகளிலும், கிழக்கு மண்டலத்தில், 35, 36, 37, 59, 60, 61, 63, 67, 69, 75 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட 2 கல்லூரியும் மற்றும் 34 பள்ளிகளிலும், மேற்கு மண்டலத்தில், 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 19, 20, 21, 22, 23, 24 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட 27 பள்ளிகளில் டெங்கு கொசு ஒழிப்பு சம்பந்தமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேற்கண்ட பள்ளிகளில், சின்டெக்ஸ் தொட்டிகளில் முறையாக சுத்தம் செய்து கொசுப்புழு உற்பத்தியில்லாமல் பராமரிக்கப்பட்டுள்ளனவா எனவும், சமையலறைகள் சுத்தமான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா எனவும், பள்ளி வளாகத்தில் உபயோகப்படுத்தப்படாத பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் பேப்பர் கப்புகள் அகற்றப்படுகின்றனவா எனவும், பயிற்சிக்காக வைக்கப்பட்டுள்ள டயர்கள் மற்றும் மாடிகளில் மழைநீர் தேங்கி உள்ளனவா எனவும் ஆய்வு செய்து கொசுப் புழுக்களை அழிப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்களை தடுப்பதற்காக கோவை மாநகராட்சி சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சிறப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...