மாநகராட்சி ஆணையர் அறிவுரையின்படி பள்ளி, கல்லூரிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அறிவுரையின்படி மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு கவனம் செலுத்தி டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாநகராட்சியில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை ஆணையர் அறிவுரையின்படி மாநகராட்சி நகர்நல அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் பல்வேறு சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, இன்று (ஆகஸ்ட் 28) மாநகராட்சி மத்திய மண்டலத்தில், 25, 45, 50, 51, 54, 80, 81, 82, 83, 84 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட 12 பள்ளிகளிலும், தெற்கு மண்டலத்தில், 76, 78, 86, 87, 89, 90, 91, 92, 94, 95, 96, 100 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட 24 பள்ளிகளிலும், வடக்கு மண்டலத்தில், 3, 4, 27, 28, 38, 39, 42, 44 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட 11 பள்ளிகளிலும், கிழக்கு மண்டலத்தில், 35, 36, 37, 59, 60, 61, 63, 67, 69, 75 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட 2 கல்லூரியும் மற்றும் 34 பள்ளிகளிலும், மேற்கு மண்டலத்தில், 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 19, 20, 21, 22, 23, 24 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட 27 பள்ளிகளில் டெங்கு கொசு ஒழிப்பு சம்பந்தமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேற்கண்ட பள்ளிகளில், சின்டெக்ஸ் தொட்டிகளில் முறையாக சுத்தம் செய்து கொசுப்புழு உற்பத்தியில்லாமல் பராமரிக்கப்பட்டுள்ளனவா எனவும், சமையலறைகள் சுத்தமான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா எனவும், பள்ளி வளாகத்தில் உபயோகப்படுத்தப்படாத பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் பேப்பர் கப்புகள் அகற்றப்படுகின்றனவா எனவும், பயிற்சிக்காக வைக்கப்பட்டுள்ள டயர்கள் மற்றும் மாடிகளில் மழைநீர் தேங்கி உள்ளனவா எனவும் ஆய்வு செய்து கொசுப் புழுக்களை அழிப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்களை தடுப்பதற்காக கோவை மாநகராட்சி சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சிறப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...