குழந்தைக்கு இந்து முறைப்படி பெயர் வைக்காத ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கணவர் கைது

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவரும் எட்வினா வானமதேவி (24) என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

இந்த நிலையில், கடந்த 45 நாட்களுக்கு முன்பு இந்த தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ரியா என்ற பெயரை எட்வினா சூட்டியுள்ளார். ஆனால், இந்து முறைப்படியே பெயர் சூட்ட வேண்டும் என்று அவரது கணவர் கோரியுள்ளார். இதனால் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்த நிலையில், நேற்று இருவருக்கும் இடையே சண்டை முற்றிய நிலையில், முரளி எட்வினாவின் கழுத்தை நெறித்து கொலை செய்தார். மேலும், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரிடம் கூறியதோடு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே மனைவி இறந்துவிட்டதாகவும் நாடகம் நடத்தியுள்ளார்.

தொடர்ந்து, முரளியிடம் போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முரளி முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்தார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, போலீசார் துருவி துருவி விசாரித்ததில், இந்து முறைப்படி குழந்தைக்கு பெயர் சூட்ட மனைவி மறுத்ததால் இருவருக்கும் இடையே நேற்று இரவு சண்டை வந்ததாகவும், அப்போது கழுத்தை பிடித்ததில் மனைவி இறந்து விட்டதாகவும் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போத்தனூர் போலீசார் முரளியை கைது செய்துள்ளனர். 

குழந்தைக்கு பெயர் வைப்பதற்காக தாயை கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...