அதிமுக அணியில் சேர்க்கவில்லை என்றால் பல ரகசியங்கள் வெளியிடப்படும்- தினகரன் அணி நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

அதிமுகவில் மூன்று அணிகளும் ஒன்று சேரவில்லை என்றால் பல ரகசியங்களை வெளியிட வேண்டியிருக்கும் எனவும் ரகசியங்களை வெளியிட்டால் தனது உயிருக்கே பாதுகாப்பு இருக்காது என கோவை டி.டி.வி.தினகரன் ஆதரவு அணி நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் எச்சரிக்கை விடுத்தார்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜின் கார், பீளமேடு அருகே இன்று காலை அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. காரில் அவரது மகன் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த எம்.பி.நாகராஜ், விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் விபத்து குறித்து கார் ஓட்டுனர் மற்றும் காவல் துறையினரிடம் கேட்டறிந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.



அப்போது அவர் கூறியதாவது:- "அதிமுகவில் அணிகள் என்று கிடையாது. கருத்து வேறுபாடுகளால் மட்டுமே பிரிந்து இருக்கின்றோம். அனைத்து தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டும். 

ஜெயா டி.வி-க்கான பணிகளை 5 ஆண்டுகளாக தான் கவனித்து வந்தேன். அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அனைவரும் இணைய வேண்டும் என்பதற்காகவே தன்னைப் போன்றவர்கள் அமைதியாக இருக்கிறோம். ஆனால் தங்களை ஒதுக்கி வைத்து விட்டு செயல்படுகின்றனர்.

மூன்று பேரும் ஒன்று சேரவில்லை என்றால் பல ரகசியங்களை வெளியிட வேண்டியிருக்கும். ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கில் கூட்டு சதி என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கிற்காகவே சசிகலா சில காலம் விலக்கி வைக்கப்பட்டு இருந்தார். டி.டி.வி. தினகரன் கட்சிக்காகவே சிறைக்கு சென்றார். சசிகலாவிடம் கட்சி பதவிக்காக சென்று நிற்காதவர் என எவருமே கிடையாது. பல உண்மைகளை வெளியிட்டால் தனது உயிருக்கே பாதுகாப்பு இருக்காது. கூட்டணிகளை கூட இறுதி செய்தது சசிக்கலாதான். 

அதிமுக-வுடன் கூட்டணி வைத்த கட்சித்தலைவர்கள் யாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சீட்டுகளை முடிவுசெய்தனர் என்பதை தெரிவிக்க வேண்டும். இன்று நடந்த இந்த விபத்து இயற்கையாக நடந்ததாக இருக்கலாம் அல்லது தன்னை அச்சுறுத்துவதற்காக நடத்தப்பட்டதாகக் கூட இருக்கலாம்" என நாகராஜன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...