கோவையில் சர்வதேச கல்வி கண்காட்சி

வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்காக ஒரு நாள் சர்வதேச கல்வி கண்காட்சி வரும் செப்டெம்பர் 2ம் தேதியன்று பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை கோவை, அவினாசி சாலையிலுள்ள கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியை கோவை எஜுகேசன் ஓவர்சீஸ் அகாடமி ஏற்பாடு செய்துள்ளது.

கோவை எஜுகேசன் ஓவர்சீஸ் அகாடமி கடந்த காலத்தில் இதே போன்ற கல்வி கண்காட்சிகளை நடத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருக்கும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் சேர்க்கைக்கான ஆலோசனை வழங்கப்படும்.

இந்த நாடுகளின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்பும் பாடங்கள், அதில் சேரும் முறைகள், சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள், விசா முறைகள், அந்த நாடுகளுக்கு செல்ல தேவைப்படும் முன் தகுதி தேர்வுகளான GRE, TOEFL, IELTS, GMAT மற்றும் SAT ஆகியவை குறித்து, மாணவர்களுக்கு தெளிவாக விளக்கப்படும்.

வெளிநாடுகளுக்கு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று சிறந்த முறையில் பயனடையலாம்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...