குன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ரூ.5 கோடியே 31 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் மேலூர் ஊராட்சிக்குட்பட்ட நெடுகல்கம்பை பகுதியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 100 மீட்டர் தடுப்புச்சுவர் பணியினையும், ரூ.5 லட்சம் மதிப்பில் 200 மீட்டர் நடைபாதை அமைக்கும் பணியினையும், அதே பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட ஆரம்பப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தினையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.



மேலும் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தைமலை கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் 1 கிலோ மீட்டர் தூரம் வரை முடிக்கப்பட்டுள்ள சாலைபணியினையும், தைமலை முதல் அம்பேத்கர் நகர் வரை ரூ.20 லட்சம் மதிப்பில் 1.1 கிலோ மீட்டர் தூரம் வரை முடிக்கப்பட்டுள்ள சாலைபணியினையும், பிரதான் மந்திரி கிராம சதக்யோஜனா திட்டத்தின் கீழ் ஆடர்லி முதல் செம்புகரை வரை ரூ.4.23 கோடி மதிப்பில் 4.1 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்று வரும் சாலை பணியினையும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேலூர் ஒசாட்டி அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சத்துணவு கூடத்தினையும், தாய்திட்டத்தின் கீழ் ரூ.23.990 லட்சம் மதிப்பில் சிங்காரா பகுதியில் 1 கிலோ மீட்டர் தூரம் வரை முடிக்கப்பட்டுள்ள சாலை பணியினையும், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எடப்பள்ளி அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சத்துணவு கூடத்தினையும், தாய்திட்டத்தின் கீழ் ரூ.5.24 லட்சம் மதிப்பில் உபதலை பகுதியில் முடிக்கப்பட்டுள்ள சாலைபணியினையும், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட காரக்கொரை பகுதியில் ரூ.14.00 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்டுள்ள சாலைபணியினையும் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன், செயற்பொறியாளர் பசுபதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...