குன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ரூ.5 கோடியே 31 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் மேலூர் ஊராட்சிக்குட்பட்ட நெடுகல்கம்பை பகுதியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 100 மீட்டர் தடுப்புச்சுவர் பணியினையும், ரூ.5 லட்சம் மதிப்பில் 200 மீட்டர் நடைபாதை அமைக்கும் பணியினையும், அதே பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட ஆரம்பப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தினையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.



மேலும் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தைமலை கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் 1 கிலோ மீட்டர் தூரம் வரை முடிக்கப்பட்டுள்ள சாலைபணியினையும், தைமலை முதல் அம்பேத்கர் நகர் வரை ரூ.20 லட்சம் மதிப்பில் 1.1 கிலோ மீட்டர் தூரம் வரை முடிக்கப்பட்டுள்ள சாலைபணியினையும், பிரதான் மந்திரி கிராம சதக்யோஜனா திட்டத்தின் கீழ் ஆடர்லி முதல் செம்புகரை வரை ரூ.4.23 கோடி மதிப்பில் 4.1 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்று வரும் சாலை பணியினையும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேலூர் ஒசாட்டி அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சத்துணவு கூடத்தினையும், தாய்திட்டத்தின் கீழ் ரூ.23.990 லட்சம் மதிப்பில் சிங்காரா பகுதியில் 1 கிலோ மீட்டர் தூரம் வரை முடிக்கப்பட்டுள்ள சாலை பணியினையும், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எடப்பள்ளி அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சத்துணவு கூடத்தினையும், தாய்திட்டத்தின் கீழ் ரூ.5.24 லட்சம் மதிப்பில் உபதலை பகுதியில் முடிக்கப்பட்டுள்ள சாலைபணியினையும், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட காரக்கொரை பகுதியில் ரூ.14.00 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்டுள்ள சாலைபணியினையும் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன், செயற்பொறியாளர் பசுபதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...