தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் இருவார கால தூய்மை விழிப்புணர்வு நிறைவு நாள்

ரயில் நிலையங்கள் மற்றும் இதர ரயில்வே இடங்களை தூய்மையாக பராமரிக்கவும், ரயில் பயணிகள் மற்றும் இதர ரயில் உபயோகிப்பாளர்களிடையே அவ்வாறு தூய்மை மேம்பாட்டுக்கு ஒத்துழைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்திய ரயில்வே நாடெங்கிலும் 16.08.2017 முதல் 31.08.2017 வரையிலான இரு வாரகாலத்திற்கு சிறப்பு தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டது. 



தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் இந்த கால கட்டத்தில் சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களிலும் சேலம் கோட்ட அதிகாரிகளும் ஊழியர்களும், பல்வேறு தூய்மை பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழச்சிகளை தூய்மை விழிப்புணர்வு நாள், தூய்மை பிரச்சார நாள், தூய ரயில்நிலைய நாள், தூய ரயில்பெட்டிகள் நாள், தூய ரயில் உணவு நாள், தூய ரயில் குடிநீர் நாள், தூய கழிப்பறை நாள், போன்ற பல்வேறு விதங்களில் மேற்கொண்டனர். 









இந்நிகழ்வுகளில் சேலம் கோட்டத்தின் ரயில்நிலையங்களான சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், உதகமண்டலம், திருப்பத்தூர், மொரப்பூர், ஆத்தூர், சின்னசேலம், சேலம்டவுன், போன்ற இடங்களில் பல்வேறு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோருடன் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டன. சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தூய்மை பராமரிப்பு மற்றும் தூய்மை விழிப்புணர்வு நிகழ்வுகளில் ஆர்வமுடன் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன், ரயில் நிலையங்களை தொடர்ந்து தூய்மையாக பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...