ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் அவசியம் இல்லை- உயர் நீதிமன்றம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டாயம் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். 

அதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் வைத்திருப்பது கட்டாயம்தான் என்று தெரிவித்தது. இதற்கு லாரி, டேக்சி உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இன்று முதல் (செப்டம்பர் 1) இந்த விதிகள் அனைத்தும் அமலுக்கு வர இருந்தது. 

இதனிடையே, லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் சுகுமார் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி "வாகன ஓட்டிகள் கட்டாயமாக அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது அவசியம் இல்லை என்றும், இதனால் பல்வேறு இடையூறுகள், சிக்கல்கள் ஏற்படும் என்றும்" அறிவித்தார்.

நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பிற்கு லாரி உரிமையாளர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள இருசக்கர வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...