ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் அவசியம் இல்லை- உயர் நீதிமன்றம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டாயம் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். 

அதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் வைத்திருப்பது கட்டாயம்தான் என்று தெரிவித்தது. இதற்கு லாரி, டேக்சி உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இன்று முதல் (செப்டம்பர் 1) இந்த விதிகள் அனைத்தும் அமலுக்கு வர இருந்தது. 

இதனிடையே, லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் சுகுமார் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி "வாகன ஓட்டிகள் கட்டாயமாக அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது அவசியம் இல்லை என்றும், இதனால் பல்வேறு இடையூறுகள், சிக்கல்கள் ஏற்படும் என்றும்" அறிவித்தார்.

நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பிற்கு லாரி உரிமையாளர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள இருசக்கர வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...