கோவை மாநகராட்சியின் பல்வேறு மக்கள் விரோதப் போக்கை கண்டித்து திமுக சார்பில் முற்றுகைப் போராட்டம்

கோவை மாநகராட்சியின் புதிய வரி சீராய்வு, குப்பை வரி, குடிநீர் இணைப்புக்கு மீண்டும் வைப்புத் தொகை உள்ளிட்ட மாநகராட்சியின் பல்வேறு மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து இன்று கோவை மாநகராட்சி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

திமுக கோவை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் மற்றும் கோவை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.முத்துசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் பொதுமக்கள், திமுக-வினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி-யைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.



இதில், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் வெ.ந.பழனியப்பன், மாவட்ட நிர்வாகிகள் சாந்தி, ஈஸ்வரி ராதாகிருஷ்ணன், டி.பி.சுப்பிரமணியம், உமா மகேஸ்வரி, நந்தகுமார், வடவள்ளி சண்முகசுந்தரம், பகுதிக்கழக செயலாளர்கள் எஸ்.எம்.சாமி , கே.எம்.சுந்தரம், குறிச்சி பிரபாகரன், வெ.ந.உதயகுமார், வி.பி.செல்வராஜ், புதூர் மணி மற்றும் கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...