தேசம் முழுவதும் விழிப்புணர்வு உருவாக்கிய நதிகளை மீட்போம் இயக்கம்

அழிந்து வரும் நம் தேசத்து நதிகள் மீண்டும் பெருக்கெடுத்து ஓடச்செய்ய நதிகளை மீட்போம் என்னும் தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கம் உருவாகி வருகிறது. பல நூற்றாண்டுகளாக வற்றாத ஜீவ நதிகளாக ஓடி நம் மண்ணையும், நம்வாழ்வையும் கலாச்சாரத்தையும் வளப்படுத்திய நம் நதிகள் கடந்த சில வருடங்களில் கவலைக்குரிய விதத்தில் வற்றி வருகின்றன. நம் நதிகளை மீட்கும் முக்கிய தருணத்தில் நாம் இப்போது இருக்கிறோம்.



நதிகளை பாதுகாக்கும் இந்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக இன்று (செப்டம்பர் 1) நாடெங்கும் லட்சக்கண்கானோர் தங்கள் ஊரின் முக்கிய வீதிகளில் நீல நிற உடை அணிந்து, நதிகளை மீட்போம் என்ற அட்டைகளை ஏந்தியும் சிலர் நதிகளை மீட்போம் என்ற தலைக்கவசம் போன்ற அட்டைகளை தலையில் அணிந்தும் நின்றனர்.



தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் சாலை ஓரங்களில் 50 அடி இடைவெளியுடன் அமைதியாக பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வண்ணம் நின்றனர். மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், கார்பொரேட் நிறுவன பணியாளர்கள், திரை உலக பிரமுகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இதில் கலந்து கொண்டனர்.

சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, உற்சாகமாக மழையில் நனைந்தபடி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நதிகளை மீட்க உறுதியாக நின்றனர்.



இந்நிகழ்ச்சி இனம், மதம், சமயம், சாதி கடந்து அனைத்து மக்களிடையேயும் பலத்த வரவேற்பை பெற்றது. பொது மக்கள் பலரும் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றதுடன் 80009 80009 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

இந்திய தொழில் துறை கழகம் (சிஐஐ), இந்திய துணை ராணுவம் (சிஆர்பிஎஃப்), எல்லை பாதுகாப்பு படையினர் (பிஎஸ்எஃப்), இந்திய இரயில்வே உட்பட பல அமைப்புகளும், கட்சி பேதம், மதபேதமில்லாமல் பல தலைவர்களும் இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவளிகின்றனர். அரசாங்க அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலர் கடந்த ஒரு மாதமாக இவ்வியக்கத்திற்க்கு ஆதரவு அளித்த வன்னம் உள்ளனர்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...