அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் - விடுதலை சிறுத்தை கட்சியினர்

அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணமென கூறி, கோவையில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை எரித்து , சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நீட் தேர்வின் காரணமாக மருத்துவ படிப்பில் சேர முடியாத மனவிரக்தியில் அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணமென குற்றம்சாட்டி, கோவை காந்திபுரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை எரித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போராட்டக்காரர்களை போலீசார் இழுத்து சென்று கைது செய்த போது, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணமென குற்றம்சாட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும் நீட் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்ய வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 10 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...