அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் - விடுதலை சிறுத்தை கட்சியினர்

அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணமென கூறி, கோவையில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை எரித்து , சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நீட் தேர்வின் காரணமாக மருத்துவ படிப்பில் சேர முடியாத மனவிரக்தியில் அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணமென குற்றம்சாட்டி, கோவை காந்திபுரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை எரித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போராட்டக்காரர்களை போலீசார் இழுத்து சென்று கைது செய்த போது, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணமென குற்றம்சாட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும் நீட் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்ய வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 10 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...