தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் மாணவி அனிதா தற்கொலை - கோவை வ.உ.சி. மைதானத்தில் போலீஸார் குவிப்பு

நீட் தேர்வால் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காததால் மனமுடைந்த அரியலூர் மாணவி அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார். மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டதே மாணவியின் தற்கொலைக்கு காரணம் எனக் கூறி தமிழகத்தின் பல பகுதிகளில் பல்வேறு அமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அரியலூர் மாணவி அனிதா தற்கொலையால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்தப்போவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வ.உ.சி. மைதானத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடுப்புகளை அமைத்து, மாணவர்கள் யாரையும் அனுமதிக்காதவாறு, போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். ரோந்து வாகனங்களிலும் போலீஸார், தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதேபோல,  தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர், திராவிடக் கழகத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சியினர் கோவை ரயில் நிலையத்தில் சென்னை - மங்களூர் விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால். ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்த போலீஸார்,  சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  கைது செய்து, ரயில் நிலையத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். 



அப்போது, 3 கட்சியினரும் சாலையில் அமர்ந்து, நீட் தேர்வுக்கு அனுமதிளித்த மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.  மேலும், தமிழகத்தை விட்டு ஆர்,எஸ்.எஸ் அமைப்பு வெளியேற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...