கோவை மாவட்டத்தில் பலத்த மழை - கோவை குற்றாலத்தில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு


கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. கோவை, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதைதொடர்ந்து கடந்த 18-ந் தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று (02.09.2017) 3-வது நாளாகவும் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கோவை குற்றால அருவி, குஞ்சராடி அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதாலும், மலையில் இருந்து வரும் தண்ணீராலும் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக, நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரை சாவடி தடுப்பணை நிரம்பியது. இதனால் குளங்களுக்கு செல்லும் வகையில் ராஜவாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2½ அடி உயர்ந்தது. அதாவது மொத்தம் உள்ள 50 அடியில் அணையின் நீர்மட்டம் 8½ அடியில் இருந்து 11 அடியாக உயர்ந்தது. இதனால் 3-வது நீரேற்று குழாய் வரை தற்போது தண்ணீர் நிரம்பி உள்ளது.தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை பெய்ய வாய்ப்பு உள்ளதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் உக்கடம், ராமநாதபுரம், உள்ளிட்ட நகர் பகுதிகளில் இன்றும் 3-வது நாளாக பெய்தது. மழை காரணமாக கோவை நேரு மைதானத்தில் மழை தண்ணீர் தேங்கி கிடந்தது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...