கோயமுத்தூர் சொஸைட்டி ஆப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் சார்பில் கண்தான விழிப்புணர்வு பேரணி

கோயமுத்தூர் சொஸைட்டி ஆப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் சார்பாக இன்று கோவையில் கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கண்தான இருவார விழா ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த இருவார விழா மக்களிடையே கண்தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மக்களிடையே கண்தானத்தை ஊக்குவிப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.



இந்த கண்தான விழிப்புணர்வு பேரணியினை கோவை மாநகராட்சி உதவி ஆணையர் அண்ணாதுரை மற்றும் கோவை மாநகராட்சி சுகாதார அதிகாரி சந்தோஷ் ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்தனர்.



உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி கண்புரை, கண்ணீர் அழுத்த நோய், வயது மூப்பின் மூலம் ஏற்படும் பார்வை இழப்பிற்கு அடுத்தபடியாக முக்கிய பங்குவகிப்பது கருவிழியினால் உண்டாகும் பார்வை இழப்பாகும். ஏறக்குறைய உலகளவில் 45 மில்லியன் மக்கள் பார்வையிழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இந்தியாவில் சுமார் 15 மில்லியன் மக்கள் பார்வையிழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக ஆண்டிற்கு 2,00,000 கண்கள் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் நிலையில் 44,806 கருவிழிகள் மட்டுமே கிடைக்கபடுகிறது. இதில் 46 சதம் மட்டுமே பார்வை இழப்பை சரி செய்யபயன்படுகிறது (20,632) மீதமுள்ள 54 சதம் கருவிழிகள் மாற்று அறுவை சிகிச்சைக்குண்டான தரமுடையதாக இருப்பதில்லை.

இதன் விளைவாக கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கான போதிய கண்தானம் கிடைக்கப் பெறாமல் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை நிபுனர்கள் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். 

பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அரசு துறைகள் போன்ற பலர் கண்தானத்தை ஊக்குவித்தாலும் இன்னமும் நமது தேவைக்கு குறைவாகவே கண்கள் கிடைக்கின்றது. 



ஹாஸ்பிடல் கார்னியல் ரிட்ரைவல் புரோகிராம் என்பது மருத்துவமனையில் இறக்க நேரிடும் நோயாளிகளிடமிருந்து கண்தானம் பெறப்படுவது. இதன் மூலமாக கண்தான விழிப்புணர்வும் நல்ல தரமான கண்கள் கிடைப்பதற்க்கும் வாய்ப்புள்ளது. 

இப்பேரணியில் கோயமுத்தூர் சொஸைட்டி ஆப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் தலைவர், பொருளாளர் மருத்துவர் டி.சந்திரசேகர் செயலாளர் கே. சுரேஸ் குமார், மற்றும் கல்லூரி மாணவர்கள் கண் வங்கி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...